Skip to main content

Posts

வேலி மசால் தீவன சாகுபடி முறை( எளிமையான சுருக்கமான வடிவில்).

1.   வேலி மசால் தீவன பயிரின் சிறப்பியல்புகள் 2.    பருவம் 3.    நிலம் தயாரித்தல் 4.    உர நிர்வாகம் 5.    விதை நேர்த்தி 6.    களை நிர்வாகம் 9   நீர் நிர்வாகம் 10    இலைவழி தெளிப்பு உரமிடுதல் 11.   பயிர் பாதுகாப்பு 12   அறுவடை 13.   விதை சேமிப்பு வேலி மசால் கால்நடைகளுக்குத் தீவனமாக புல்வகை தீவனப் பயிர்களைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பயறு வகை தீவனப் பயிர்களையும் கொடுத்தால்தான் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். ஆடு மாடுகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு தானிய புல்வகை தீவனப்பயிர்கள் மற்றும் ஒரு பங்கு பயறு வகை தீவனப் பயிர்களும் வழங்கப்படவேண்டும். அதிக புரதச்சத்து கொண்ட வேலி மசாலை கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறையினை போக்க முடியும்.  ( புகைப்படம்: காவேரி பண்ணை ) வேலி மசால் தீவன பயிரின் சிறப்பியல்புகள் ·          பல்லாண்டு தாவரமாக பயிர் செய்யலாம் ·       ...

தீவனப்புல் கோ-4 மற்றும் கோ- 5 ஒர் ஒப்பீடு!

அறிவியல் பூர்வமான அட்டவனை ஒப்பீட்டு பட்டியல் கட்டுரையின் கீழே இணைத்துள்ளேன். அதில் கோ-3 முதல் கோ-5 வரை ஒப்பீட்டு பட்டியல் உள்ளது. அதை நாம் பார்க்கும் போதே ஒவ்வொன்றுக்குமான வித்தியாசத்தை   எளிமையாக நாம் புரிந்துகொள்ளலாம். அப்பட்டியல் அறிவியல் பூர்வமானது ஆகும்.            நண்பர்களே நான் உங்களிடம் பகிர உள்ளது. நடைமுறையில் அது நமது பண்ணையில் எப்படி உள்ளது என்பதைத்தான். எங்களது பண்ணையை பல ஆண்டுகளாக தமிழகத்தில் பல ஆயிரம் கால்நடை பண்ணையாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் தெரியும் என்பதாலும் பல ஆயிரம் பேர் ஆலோசனைகளும் பயிற்சியும் எடுத்துக்கொண்ட இடம் என்பதாலும் எங்களை நன்கு அறிவீர்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையை எழுதுகிறேன்.      என்னதான் நமது பல்கலைக்கழகங்கள் சொன்னாலும் அது நமது நடைமுறைக்கு சரியாக உள்ளதா? என்று பார்க்க வேண்டும். அவ்வாறு தமிழகம் முழுக்க உள்ள பண்ணையாளர்கள் அனைவருக்கும் ஏற்ற ஒன்றாக இருக்குமானால் அது வெற்றி அடையும்.      அதுபோல் புதுவரவான கோ-5 தீவன ஒட்டுப்புல் சில ...

குறைந்த பரப்பில் அதிக பசும்தீவன உற்பத்தி நுட்பம்.

எங்கள் பண்ணையில் ஒரு பரிசோதனை முயற்சியாக கால்நடைகளுக்கான தீவனபயிர் விவசாயமுறையில் செய்து பார்த்தோம்.சிறப்பாக உள்ளதை அனுபவமாக உணர்கிறோம். ஏனைய கால்நடைப்பண்ணையாளர்களும் இதை முயற்சிக்கலாம். கோ-4 அல்லது கோ-5 தீவனப்பயிர் விவசாயம் செய்யும் நிலத்தில் 3 முதல் 3.5 அடி பார் எடுத்து விவசாயம் செய்வோம்.இதன் இடையில் 1 முதல் 1.5 அடி இடைவெளியில் வேலிமசால் விவசாயம் செய்யலாம் இது சிறப்பாக பலன் கொடுக்கிறது. பொதுவாக கோ-4 அல்லது கோ-5 விவசாயம் செய்ய மேற்கண்ட இடைவெளியைத்தான் அனைவரும் பின்பற்றுவார்கள்.அதுதான் சிறப்பும் கூட.ஆகையால் அந்த அளவு இடைவெளியில் பார்களுக்கு இடையே வேலிமசால் நடவுசெய்யும் போது எவ்விதத்திலும் கோ-4 தீவனத்தின் வளர்ச்சி பாதிப்பதில்லை. மேலும் கோ-4 வேலிமசால் வளர்ச்சியையும் எவ்விதத்திலும் பாதிப்பதில்லை. ஆகையால இரண்டும் சிறப்பாக வளர்கிறது. உதாரணத்திற்கு 1 ஏக்கரில் கோ- 4 பயிரிடும் போது நமக்கு கிடைக்கும் திவனத்தின் அளவு எப்போதும் போல் கிடைப்பதுடன் கூடுதலாக வேலிமசால் சுமார் ½ ஏக்கர் அளவிற்கு கிடைக்கிறது. இதனால் கிடைக்கும் பலன்கள்: ·         ...