ஒரு பண்ணையாளர் வெற்றிப்பெருவதையும் தோல்வி அடைவதையும் நிர்ணயிக்கும் காரணிகளில் முக்கியமானதாக எப்போதும் இருப்பது பசும்தீவன விவசாயம்.


     இந்த பசும்தீவன வகைகளில் அதிக புரதம் அடங்கிய பசும் தீவனங்களில் ஒன்றுதான் வேலிமசால் ஆகும். இது ஒரு பயறு வகையை சேர்ந்தது ஆகும். ஏனைய பசும் தீவனங்களை விட இதில் புரதம் மற்றும் ஏனைய சில சத்துக்கள் மற்றவற்றை ஒப்பீடும் போது அதிகம் உள்ளது. ஆகையால் கால்நடைகளுக்கு இது மிக அத்தியவாசமானதாக உள்ளது.

  வேலி மசால் தீவன பயிரின் சிறப்பியல்புகள்

·             பல்லாண்டு தாவரமாக பயிர் செய்யலாம்

·            அதிக அளவு புரதச்சத்து (20 -22 சதம்) கொண்டது.

·             ஒரு செடிக்கு 15 முதல் 20 வரையிலான கிளைகள் விடும் தன்மை     உடையது.

·             ஒரு செடியில் அதிக காய்கள் (75 – 100) தரக்கூடியது.

·             வருடத்திற்கு ஏக்கருக்கு 50 டன்கள் வரை பசுந் தீவன மகசூல்            கிடைக்கும்.

·             வருடத்திற்கு ஏழு அறுவடைகள் தரக்கூடியது.

·             வருடத்திற்கு ஏக்கருக்கு 200 – 250 கிலோ விதை மகசூல் கிடைக்கும்.

·             பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை உடையது.






(புகைப்படங்கள் : காவேரி பண்ணை)

        இவ்வளவு சிறப்பான பசும் தீவனத்தை எங்கள் பண்ணை அனுபவத்தில் பல கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் புரிந்துக்கொண்டு விவசாயம் செய்து கால்நடைகளுக்கு கொடுத்து சிறப்பாக வளர்க்கின்றார்களா? என்று பார்த்தால் பெரும்பாலும் இல்லை என்றும் அனுபவமாக உள்ளது.

     இதில் பல பிரச்சனைகள் இருக்கலாம் ஆனாலும் அதை கடந்து இதை நாம் செய்ய வேண்டும் இல்லை என்றால் நிச்சயமாக உங்களால் நீண்டகாலத்துக்கு வெற்றிகரமான பண்ணையாளராக திகழமுடியாது.

     சரி தற்போது பெரும்பான்மையான பண்ணையாளர்கள் செய்யும் தவறுகளை என்ன என்று பார்த்தோம் என்றால்,
முதலில் தீவன விவசாயம் என்றாலேயே முதலில் நம்மவர் செய்யும் ஒரே காரியம் கோ4 ,கோ5 வகை நேப்பியர் வகை புற்களை வாங்கி பயிறிட்டு பண்ணையை ஆரம்பித்துவிடுவார்கள்.
    
     ஏனென்றால் இதுதான் மிக அதிகமான அளவுக்கு ஒரு ஆண்டுக்கு ஒரு ஏக்கரில் விளைகிறது, மற்றவற்றை ஒப்பீடு செய்யும் போது. ஆகவே அதிகமாக கிடைப்பதால் அதிக கால்நடைகளை வளர்க்களாம். அதனால் அதிக வருமானம் கிடைக்கும் என்று நம்மவர்கள் எண்ணுவதாலும் மேலும் பண்ணை வைப்பதற்கு வழிகாட்டுதல் வழங்குபவர்கள் முழுமையான சரியான அறிவியல் முறையிலான வழிகாட்டுதலை அவர்களுக்கு வழங்காததும் அதை முழுமையாக தெரிந்துக்கொண்டு பண்ணை ஆரம்பிக்கும் அறிவியல் பூர்வ சிந்தனாமுறை நம்மவர்களிடம் மிகக்குறைவாக இருப்பதும் இப்பிரச்சனைக்கு காரணம் ஆகும்.

     மிகவிலைக்குறைவான, புரதச்சத்துகள் மற்றும் ஏனைய சத்துக்கள் அடங்கிய வேலிமசாலில் உள்ளது போன்று  கோ4,கோ5 வில் சத்துக்கள் கிடைக்காமல் கால போக்கில் கால்நடைகளுக்கு சத்துப்பற்றாக்குறை மற்றும் அதைத்தொடர்ந்து பண்ணையில் ஏற்படும் தொடர்புடைய தொடர் பிரச்சனைகளால் பண்ணையாளர்கள் தோல்வியை சந்திக்கின்றனர். இதில் இருந்து மீள நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்ற தீவனங்கள், இணை உணவுகள் மற்றும் மருந்துகளை நம்பி கால்நடைகள் உயிர்வாழ வேண்டிய சூழலில், நீண்ட காலத்திற்கு பொருளாதார ரீதியான தோல்வியை பண்ணையாளர் சந்திக்கின்றார்.

     ஆகவே புதிய கால்நடைப் பண்ணையாளர்கள் மற்றும் பழைய கால்நடைப் பண்ணையாளர்கள் ஆகிய இருவருமே மேற்கண்ட தவறுகள் இழைப்பதை பார்க்க முடிகிறது.

     இதற்கு உள்ள தீர்வுகளில் நாங்கள் ஒரு வழியாக வேலிமசால் பசும் தீவன விவசாயத்தை பார்க்கிறோம். இதை அனுபவமாகவும் கூறிகிறோம். விலைக்குறைவான , நீண்ட காலத்தில் நம் நிலத்தில் இருந்தே விவசாயம் செய்து கொண்டு, நல்ல தரமான உணவை நம் கால்நடைகளுக்கு வழங்கமுடியும். மேலும் இதே போன்று புரதம் அதிகம் உள்ள அகத்தி, சவுண்டல் (அ) சூபாப்புல், கிளரிசெடியா ஆகிய மரங்களையும் நாம் எந்த அளவிற்கு அதிகமாக கால்நடைகளுக்கு கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு நல்ல தரமான கால்நடைகளை குறைவான பராமரிப்பு செலவோடு வளர்க்கலாம். நாமும் நியாயமான விலையில் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வெற்றிகரமான பண்ணையாளராக திகழலாம்.

குறிப்பு: மேற்கண்ட கட்டுரை கவேரி பண்ணையில் அனுபவ உழைப்பின் மூலம் அறிந்தது ஆகும்.





விவசாய நாடாக விளங்கும் நமது இந்தியாவில் கால்நடைப் பராமரிப்பை கிராமப்புறங்களில்  மூலத்தொழிலாகவும், சில பிரிவினர் துணைத் தொழிலாகவும் மேற்கொண்டுள்ளனர்.
உயர்ரகப் பசுக்களைப் பராமரித்து அதிக அளவு பால் உற்பத்தியைப் பெருக்கி வருகிறோம். ஏழைகளின் பசு என்றழைக்கப்படும் வெள்ளாடு பராமரிப்பால், குறைந்த முதலீட்டில் அதிக அளவு லாபம் பெறலாம்.
ஆடுகள் பராமரிப்பதற்கு ஆகும் செலவு மற்ற கால்நடைப் பண்ணைகளின் முதலீடுகளைக் காட்டிலும் மிகக்குறைவு. ஓர் ஆட்டிலிருந்து ஓராண்டுக்குக் கிடைக்கும் சாணமும், சிறுநீரும் அரை ஏக்கர் நிலத்துக்கு உரமாக்கப் போதுமானது. வேகமாக வளரும் தன்மையுடைய இறைச்சிக்கோழிகள் பண்ணை மூலம் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம்.
÷ஒரு தேசத்தின் மாண்பும், நற்பண்பின் வளர்ச்சியும் அந்த நாட்டின் கால்நடைகளைப் பேணுவதிலிருந்து அறிய முடியும் என மகாத்மா காந்தியடிகள் கூறியதன் மூலம் கால்நடைப் பராமரிப்பின் சிறப்பை உணர முடிகிறது.
÷பெருகிவரும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்பவும், மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்பவும், அதிகரித்துவரும் மக்கள் நெருக்கடிக்கு ஏற்பவும் இப்போதைய சூழலில் விவசாய நிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறி வருகின்றன.
÷இந்நிலையில் மனிதனுக்குத் தேவையான இடுபொருள்களின் உற்பத்திக்கே போதுமான நிலம் இல்லையென்கிற விதத்தில் கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் புற்களின் உற்பத்தி மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே காலச்சூழ லுக்கேற்ப கால்நடைகளின் தீவனத்துக்கு மாற்று வகைகளை நாம் சிந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
மேற்கூறியவைகளின் அடிப்படையில் கால்நடைகளுக்கு மர இலைகளைத் தீவனமாக அளிக்க நாம் பழக்கப்படுத்திக் கொள்ளுதல் அவசியமாகிறது. மேய்ச்சலை மட்டுமே மையமாக வைத்து வளர்க்கப்படும் கால்நடைகள் பெரும்பாலும் புரதம் அல்லது எரிசத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கும். வறட்சி மற்றும் கோடைக்காலங்களில் கால்நடைகளுக்கு ஊட்டச்சத்துப் பற்றாக்குறை ஏற்பட்டு அவை உடல் எடையை இழந்து உற்பத்தியையும் குறைக்கின்றன. இந்நிலை மாற வேண்டுமானால் கோடையிலும், பசுமை செழித்து இருக்கும் மரங்களின் இலைகளைத் தீவனமாகக்  கால்நடைகளுக்கு அளிக்க வேண்டுதல் அவசியமாகிறது.
தீவன மரங்கள் என்பது துளிர், இளம் கிளைகளுடன் கூடிய இலைகள் மற்றும் அதிலுள்ள காய்கள், பழங்கள், விதைகளை கால்நடைகளுக்குக் கொடுக்கக் கூடியனவாகும்.
÷மர இலைகளில் பொதுவாக 10 முதல் 18 சதவிகிதம் புரதச்சத்தும். சுபாபுல், அகத்தி போன்ற மரங்களின் இலைகளில் 20 முதல் 35 சதவிகிதம் புரதச்சத்தும் உள்ளது. ஆனால் ஆடு மாடுகளுக்கு எரிசத்தை அளிக்கும் நார்ச்சத்து புற்களில் இருப்பதைவிட மர இலைகளில் குறைவாக உள்ளது. மர இலைகளையே முழுத்தீவனமாக உட்கொள்ளும் ஆடு மாடுகளுக்கு எரிசத்தை அளிக்கவல்ல புற்கள், வைக்கோல் போன்றவற்றைச் சேர்த்து அளிப்பதால், மர இலைகளை உட்கொள்வதால் ஏற்படும் எரிசத்து பற்றாக்குறையைப் பெருமளவு போக்கலாம். கால்நடைகளுக்குக் கோதுமை அல்லது அரிசித் தவிட்டைத் தீவனத்தில் சேர்ப்பதால் தவிட்டில் உள்ள மணிச்சத்து மரஇலைகளில் உள்ள சுண்ணாம்புச்சத்துடன் சேர்ந்து முழுமையாகக் கால்நடைகளுக்குக் கிடைக்கும்.
÷கால்நடைகளுக்கு மரஇலைகளை மட்டும் தீவனமாக அளிக்காமல், மர இலைகளுடன் புற்கள், வைக்கோல் போன்றவற்றையும் தவிட்டையும் சேர்த்து அளித்தால் ஓரளவு சமச்சீர் தீவனம் கிடைக்கும். இதனால் அவற்றின் உற்பத்தியும் அதிகரிக்கும்.
பொதுவாக மாடுகளுக்கு அவை உண்ணும் தழைத் தீவனத்தில் 30 சதவிகிதம் மர இலைகளை அளிக்கலாம். நாளொன்றுக்கு 12 முதல் 15 கிலோ பசும் இலைகள் தேவைப்படும். ஆடுகளுக்கு தழைத்தீவனத்தில் 50 சதவிகிதம் வரை மர இலைகள் தேவைப்படுகின்றன. வளர்ந்த ஓர் ஆட்டுக்கு 2 முதல் 3 கிலோ மர இலைகள் நாளொன்றுக்குத் தேவைப்படுகிறது.
நமது பகுதிகளில் உள்ள கருவேல், வெளிவேல், வாகை, பில்லவாகை, பலா, பீனாரி, வேம்பு, பூவரசு, ஆல், அரசு, ஆயா, உத்தி, சவுண்டல், முருங்கை, கிளாசிடியா, புளி, இலந்தை, கொடுக்காப்புளி, கல்யாண முருங்கை, அகத்தி, உசிலம்,  சீமைக்கருவேல் ஆகிய மரங்கள் தீவன மரங்களாகக் கருதப்படுகின்றன.
தீவன மர இலைகளில்  டேனிக் அமிலம் உள்ளதால் முதல் ஓரிரு நாள்களுக்குச்  சரியாக உண்ணாமல் இருக்கும். பழகிய பின் நன்கு உண்ணும் திறனுடையதாக விளங்கும். ஒரு சில காரணங்களால் கால்நடைகள் சில மர இலைகளை விரும்பி உண்ணாது. அதனைப் பழக்கப்படுத்த கீழ்க்குறிப்பிட்ட சில வழிமுறைகளைக் கையாளலாம். மர இலைகளைப் பிற புற்களுடன் சிறிது சிறிதாகச் சேர்த்து அளித்து கால்நடைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும்.
காலையில் வெட்டிய இலைகளை மாலையிலும், மாலையில் வெட்டிய இலைகளை அடுத்த நாள் காலை வரையிலும் வாட வைத்து பிறகு தீவனமாக அளிக்க வேண்டும்.
மர இலைகளை நிழலில் காய வைத்து அவற்றின் ஈரப்பதத்தை சுமார் 15 சதவிகிதத்துக்கும் கீழே குறைத்துப் பின்பு தீவனமாக அளிக்க வேண்டும். மர இலைகள் மேல் சுமார் 2 சதவிகிதம் சமையல் உப்புக் கரைசலைத் தெளித்து பின்பு தீவனமாக அளிக்கலாம்.  மர இலைகளின் மீது வெல்லம் கலந்த நீரைத் தெளித்தும் தீவனமாக அளிக்கலாம்.
மர இலைகளை விரும்பி உண்ணும் கால்நடைகளையும், விரும்பாத கால்நடைகளையும் அருகருகே கட்டி வைத்து தீவனம் அளிக்கலாம். மர இலைகளைத் தீவனமாகக் கால்நடைகளுக்கு அளிக்கும்பொழுது தினமும் சிறு சிறு அளவில் அளித்து அவற்றைப் பழக்கப்படுத்த வேண்டும். கால்நடைகள் எப்போதும் ஒரே வகையான மர இலைகளை விரும்புவது இல்லை. ஆகையால் பல்வேறு மரங்களின் இலைகளை அளிப்பது நல்லது.
÷கால்நடைகளுக்கு மக்காச்சோளம், சோளம், தீவனக்கம்பு போன்றவை தானிய வகைகளாகவும், கம்பு, நப்பிய ர் ஒட்டுப்புல், கினியாப்புல், எருமைப்புல், கொழுக்கட்டைப்புல், தீனாநாத் புல் போன்றவை புல்வகைகளாகவும், முயல்மசால்,வேலி மசால், தீவனதட்டைப்பயிறு, ஆட்டுமசால், சங்குப்பூ போன்றவை பயிறுவகைகளாகவும் சுபாபுல், வாகை, வேம்பு, அகத்தி உள்ளிட்டவை தீவன மரவகைகளாகவும் தீவனமாக அளிக்கப்படுகின்றன.
கோடை மற்றும் வறட்சிக் காலங்களில் தீவனப்பற்றாக்குறை அதிகம் காணப்படுவதால், ஏழைவிவசாயிகள் பாதிக்கப்படுவதை கால்நடைகளுக்கு மர வகைகளைத் தீவனமாகப் பயன்படுத்தி போக்க முடியும். உடைத்த இறுங்குச் சோளம், கேழ்வரகு, கம்பு, சாமை, கோதுமை, கொள்ளு ஆகியவற்றை மக்காச்சோளத்துக்குப்  பதிலாக 50 சதவிகிதம் வரை தீவனத்தில் அளிக்கலாம். அரிசித்தவிடு, கோதுமைத்  தவிடு, அரிசிக்குறுநொய், உளுந்து, பயிறு, கடலைப் பொட்டு ஆகிய தானிய உபபொருள்களை 50 சதவிகிதம் வரை தீவனத்தில் கலக்கலாம். கிழங்குத்திப்பி, பருத்திக்கொட்டை, ஓடு நீக்கப்பட்ட புளியங்கொட்டை ஆகிய வேளாண் கழிவுப் பொருள்களையும் கால்நடைகளின் தீவனத்தில் சேர்க்கலாம்.
கரும்புச்சோகையை பதப்படுத்தி தீவனப்பற்றாக்குறையைப் போக்கலாம். சூரியகாந்தி செடி, விதை நீக்கிய சூரியகாந்தி ஆகியவற்றைச் சிறுதுண்டுகளாக வெட்டி, கால்நடைகளுக்கு உணவாக அளிக்கலாம்.
25 கிலோ எடையுள்ள வளர்ந்த வெள்ளாட்டுக்கு நாளொன்றுக்கு 1 முதல் 1.5 கிலோ மர இலைகளை விவசாயக் கழிவுகளுடன் சேர்த்து அளித்தால் வளர்ச்சி அதிகரிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 30 சதவிகிதப் புற்களுடன் 20 சதவிகிதம் மர இலைகளைச் சேர்த்து தீவனமாக அளித்தால் கன்றுகளின் வளர்ச்சி 58 சதவிகிதம் அதிகரிப்பதாகவும், 50 சதவிகிதம் வைக்கோலுடன் 40 சதவிகிதம் சுபாபுல் இலைகளைச் சேர்த்து தீவனமாக அளித்தால் கிடாரிகன்றுகளின் வளர்ச்சி 35 சதவிகிதம்  அதிகரிப்பதாகவும் ஆராய்ச்சித் தகவல்கள் கூறுகின்றன.





மாலை அல்லது இரவு நேரங்களில் தீவனமிட்டால் கால்நடைகள் நல்லமுறையில் உண்ணும். கடும்வெயில் நேரத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது. விஷச்சத்துள்ள தீவனப்பயிர்களை கால்நடைகளுக்கு தவிர்த்தல் அவசியம். தீவனத் தட்டைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி அளிப்பதால் கழிவுகள் குறையும். மழையின்றி வாடும் இளம் சோளப்பயிரில்  மாட்டை மேய்க்கக் கூடாது. ஏனெனில் அவற்றில் உள்ள சயனிக் அமிலம் உடனடியாக இறப்பை ஏற்படுத்தும். முழு தீவனத்தையும் ஒரே நேரத்தில் அளிக்காமல் இரண்டு அல்லது மூன்று தடவைகளாகப் பிரித்து அளித்தல் வேண்டும்.
(கட்டுரையாளர்:  கால்நடை உதவி மருத்துவர் மற்றும் காவேரி பண்ணை)
இந்தியாவில் கால்நடைகளின் எண்ணிக்கை அயல்நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு தீவனப் பற்றாக்குறையும் மிக முக்கியமான காரணமாகும்.

தற்போது கால்நடைகளுக்கு 70 முதல் 75 சதவிகிதம் வரை பசுந்தீவனப் பற்றாக்குறை உள்ளது. கால்நடைகளின் உடல் வளர்ச்சி, பால், இறைச்சி உற்பத்தி, இனப் பெருக்கத் திறன், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றுக்கு பசுந்தீவனம் அளிப்பது மிகவும் இன்றியமையாததாகும்.
                
                      (புகைப்படம்- கோவைப்பல்கலைக்கழகம்)


கால்நடைகள் பசுந்தீவனங்களை விரும்பி உண்பதால் அவை உட்கொள்ளும் அளவு அதிகரித்து நல்ல உடல் வளர்ச்சி பெறுகிறது. பசுந்தீவனங்களில் அதிக அளவிலுள்ள புரதம், தாது உப்புகள் மற்றும் உயிர்ச்சத்துக்கள் கால்நடைகளின் உடல் வளர்ச்சிக்கும், பால், இறைச்சி உற்பத்திக்கும், இனப் பெருக்கத் திறனுக்கும் பெரிதும் உதவுகின்றன. அத்துடன் செரிமானத் திறனை அதிகப்படுத்துவதுடன் மட்டுமில்லாமல் கால்நடைகளின் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகின்றன.

பசுந்தீவனங்களைக் கொடுப்பதால் அதிக அளவு அடர் மற்றும் உலர் தீவனங்களைக் கொடுப்பதைத் தவிர்க்கலாம். இதனால் தீவனச் செலவை மிகவும் குறைக்க முடியும்.
பசுந்தீவனங்கள் அனைத்து பருவ காலங்களுக்கு ஏற்றதாகவும், வறட்சியைத் தாங்கக் கூடியதாகவும், விஷத் தன்மை அற்றதாகவும், தரமானதாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். அத்துடன், பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறன் உடையதாகவும், விதை மற்றும் விதைப் பொருள்கள் மலிவானதாகவும், நல்ல வாசனையுடனும் இருப்பது அவசியம்.
தானியத் தீவனப் பயிர்கள்
தானியத் தீவனப் பயிர்கள் கால்நடை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை தனியாக தீவனத்துக்காக மட்டும் பயிரிடப்படுவதில்லை. தானிய உற்பத்திக்காக பயிரிடப்பட்டு அவற்றை அறுவடை செய்த பின்பு பெறப்படும் பயிர் தண்டுகள் மற்றும் வைக்கோல் ஆகியன தீவனமாக உபயோகப்படுத்தப்படுகிறது. பயிர் தண்டுகள் மற்றும் வைக்கோல் ஆகியவை முக்கியமாக உலர் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. பசுந்தீவனங்களுடன் ஒப்பிடுகையில் இவற்றில் சத்துக்கள் குறைவாகவே காணப்படுகிறது. ஆகவே தானிய வகைப் பயிர்களில் பிரத்யேகமானது தீவன மக்காச்சோளம் சூப்பிரிக்கஸ் மக்காச்சோளம். இவற்றை பயிர்களில் தானியங்களாக தனியாக அறுவடை செய்யாமல் பயிர் முழுவதும் 50 சதவீதம்  பூக்கும் தருவாயில் கால்நடைகளுக்கு உணவாக கொடுக்க வேண்டும்.

தீவனச் சோளம் ( கோ.எப்.எஸ்-29): தீவனச் சோளம் (கோ.எப்.எஸ்-29) என்ற ரகம் உயரமாக வளரும் மற்றும் அதிக தீவன மகசூல் கொடுக்க வல்லது. இறவைப் பயிராகவோ அல்லது மானாவாரியாகவோ இவற்றை பயிரிடலாம் விதைத்து 60 நாள்களில் அறுவடைக்கு தயாராகிறது. ஒரு ஹெக்டருக்கு 25 முதல் 30 கிலோ வரை விதை தேவை. ஹெக்டருக்கு 10 டன் தொழு உரம், 60 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல் சத்து என்ற அளவில் இட வேண்டும். விதைகளை வரிசைக்கு வரிசை 30-40 செ.மீ. இடைவெளியும், செடிக்குச் செடி 10 செ.மீ. இடைவெளிவிட்டு பார்களில் விதைக்கலாம்.

விதைத்தவுடன் முதல் நீர் பாசனமும், பின்னர் 3ஆம் நாள் மறுபாசனமும் பின்பு 10 நாள்களுக்கு ஒரு முறையும் பாசனம் செய்ய வேண்டும். விதைத்த 60 நாள்களிலிருந்து தொடர்ந்து பூக்கும் வரை அறுவடை செய்யலாம். ஆண்டுக்கு 5 முறை அறுவடை செய்யலாம். இதில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளன. சைலேஜ் முறையில் பதப்படுத்துவதற்கு பசுந்தீவன சோளப்பயிரை, சிறுசிறு துண்டுகளாக வெட்டி பக்குவப்படுத்தப்பட்ட முறையில் சேமித்து வைக்கலாம். மேற்கூறிய தீவனச் சோளம் (கோ.எப்.எஸ்-29) பசுந்தீவனப் பயிர்களின் விதைகள் தேனி உழவர் பயிற்சி மையத்தில் கிடைக்கிறது.

கால்நடை வளர்ப்போர் இப்பசுந்தீவனப் பயிர்களை உற்பத்தி செய்து அவர்களுடைய கால்நடைகளுக்கு கொடுப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் விற்பனை செய்து நல்ல பலன் பெறலாம்
ஆதாரம் : உழவர் பயிற்சி மையம், தேனி மாவட்டம். தமிழ்நாடு

 தீவனப் பயிர்கள்
தீவன சோளம் (இறவை)
பயிர் மேம்பாடு

மாவட்டங்கள்
இரகங்கள்
அ. இறவை                                        
ஜனவரி – பிப்ரவரி மற்றும் ஏப்ரல் – மே அனைத்து மாவட்டங்கள்
கோ எஃப் , எஸ் – 29 & கோ 31 (மறுதாம்பு சோளம்)
ஆ. மானாவாரி                                 
ஜுன் – ஜுலை
அனைத்து மாவட்டங்கள்
செப்டம்பர் – அக்டோபர்
அனைத்து மாவட்டங்கள்

சிறப்பியல்புகள்

விவரங்கள்
கோ (எப்.எஸ்) 29
கோ (எப்.எஸ்) 31
பெற்றோர்
டி.என்.எஸ் 30 x சொர்கம் சுடானேன்ஸில் இருந்து பெறப்பட்டது.
Gamma ray (400 Gy) mutant of CO (FS) 29
வயது (நாட்கள்)
மறுதாம்பு வகை
(3 years)
மறுதாம்பு வகை
(3 years)
சராசரி பசிந்தீவன மகசூல் (டன்/எக்டர்)
160-170 (6-7 மறுதாம்புகள்)
190-(6-7மறுதாம்புகள்)
தோற்ற இயல்புகள்
தண்டின் உயரம் (செ.மீ)
220-250
270 - 290
தூர்களின் எண்ணிக்கை
10-15
12-17
இலைகளின் எண்ணிக்கை
80-105
90-110
இலை நீளம் (செ.மீ)
75-90
85 - 95
இலை அகலம் (செ.மீ)
3.5-4.6
4.5 - 5.0
இலை தண்டு வீதம்
0.2-0.25
0.26
தர இயல்புகள்
புரதச்சத்து (%)
8.41
9.86
உலர் பொருள் (%)
23.60
25.9
நார் சத்து (%)
25.60
19.80
ஐ.வி.டி.எம்.டி (%)
50.30
52
குறிப்பு : தீவனச் சோளத்துடன் கோ – 5 மற்றும் கோ – எஃப் சி 8 இரக தட்டைப்பயறை சேர்த்து ஊடு பயிராக பயிர் செய்தால் சத்தான தீவனத்தைப் பெறலாம்.

சாகுபடிக் குறிப்புகள் : தீவனச்சோளம் கோ 31

பருவம்
:
ஆண்டு முழுவதும் இறவைப் பயிராகப் பயிர் செய்யலாம். ஒரு முறை விதைத்து பல முறை அறுவடை செய்யலாம்.
நிலம்
:
நீர் தேங்காத நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
நிலம் தயாரித்தல்
:
2 முதல் 3 முறை உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தில் 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்கவும். உழுவதற்கு முன் எக்டருக்கு 25 டன் தொழுவுரம் இடவும்.
விதை அளவு

5 கிலோ / எக்டர்
இடைவெளி
:
30 x 15 செ.மீ.(விதைகளை பார்களின் இருபுறமும் விதைக்க வேண்டும்)
60 x 15 செ.மீ.(விதை உற்பத்தி செய்வதற்கு)
உரம்(எக்டருக்கு)
:
அடியுரம் 
45:40:40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து
 
மேலுரம்
 
விதைத்த 30 வது நாட்களில் 45 கிலோ யூரியா இட வேண்டும். ஒவ்வொரு ஆண்டு முடிவுக்குப்பின்  45:40:40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து
 
இடவும்.
களை நிர்வாகம்
:
முதல் களை விதைத்த 25-30 நாட்களில் எடுக்கவும். பிறகு தேவைப்படும் போது ஒவ்வொரு அறுவடைக்குப்பின்பும் ஒரு முறை களை எடுத்து உரமிடவும்.
நீர்ப்பாசனம்
:
விதைத்தவுடன் நீர் பாய்ச்சி, மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் கொடுத்த பிறகு 7-10 நாட்களுக்கொருமுறை மண் வகை மற்றும் மழை அளவைப்பொறுத்து நீர் பாய்ச்ச வேண்டும்.
பயிர்ப்பாதுகாப்பு
:
பொதுவாகத் தேவையில்லை
பசுந்தீவன அறுவடை
:
50 விழுக்காடு பூக்கும் தருணத்தில் அறுவடை செய்யலாம். முதல் அறுவடை விதைத்த 65 -70 நாட்களிலும் அடுத்த அறுவடைகள் 50 நாட்களுக்கொருமுறை
விதை அறுவடை
:
விதைத்த 110-125 நாட்களில் அறுவடை செய்யலாம்.
பசுந்தீவன மகசூல்
:
192 டன்கள் / எக்டர்/ ஆண்டு (6-7 அறுவடைகளில்)
விதை மகசூல்

1000 கிலோ / எக்டர்/ ஆண்டு. ஆண்டுக்கு மூன்று முறை அறுவடை செய்யலாம். விதை உறக்க நிலை 45-60 நாட்கள். அதனால் அறுவடைக்குப் பிறகு 60 நாட்கள் கழித்து விதைக்க வேண்டும்

குறிப்பாக மழைக்காலம் இனி தீவரமாக இருக்கும் என்பதால் பயிர்களின் வளர்ச்சிக்கு மிகச்சாதகமாக இருக்கும், இயற்கையாகவே மழை மற்றும் சத்துக்கள் அதிகாமாக கிடைப்பதால் மிகச்சிறந்த முளைப்புத்திறம் மற்றும் அதிக விளைச்சலும் கிடைக்கும். பராமரிப்பது எளிதாக இருக்கும். அதாவது நீர்ப்பாய்ச்சுவதும், உரமிடுவதும் இனி வரும் மழைக்காலத்தில் அதிகம் தேவைப்படாது. இவ்வேளையை இயற்கையே பார்த்துக்கொள்ளும். ஆகையால் விவசாயிகள் இனிவரும் ஆடிப்பட்டத்தில் தீவனப்பயிர்களை புதிதாக நடவு செய்யலாம்.



மேற்கண்ட புகைப்படங்கள் காவேரி பண்ணையில் சில நாட்களுக்கு முன் எடுத்தது.

தற்போது எங்கள் பண்ணையில் கால்நடை பண்ணையாளர்கள்/ நண்பர்களுக்கு வழங்க தயார் ஆகிக்கொண்டுள்ள கோ-4, கோ-5 தீவனக்கரனைகள் புகைப்படங்கள் கீழே. கோ-4, கோ-5 தீவனக்கரனைகளுக்கு முன்பதிவுகள் செய்ய தொடர்புகொள்ளவும் நண்பர்களே.





கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல் கோ (க.நே) 4
கால்நடை வளர்ப்பானது உழவுத் தொழிலின் உப தொழிலாக இருப்பதோடு மனிதர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்குகின்ற இன்றியமையாத வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது. பொதுவாக கால்நடைகளுக்கு வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை, மக்காச்சோளத்தட்டை மற்றும் பிற பயிர்களின் செடிகள் உணவாக கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மேற்கண்ட தீவனங்கள் கால்நடைகளுக்கு போதுமான ஊட்டச்சத்தினை அளிப்பதில்லை. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினால் 2008ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கால்நடை வளர்ப்பதற்கு உகந்த தீவன புல் வகையான கோ 4 (கம்பு நேப்பியர்) ஒட்டுப்புல்லினை தீவனமாக கொடுப்பதன் மூலம் கால்நடைகளுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்தினை அளிக்கலாம். இது தீவனக்கம்பு மற்றும் நேப்பியர் புல் ஆகிய 2 புல் இனங்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது.


 ( புகைப்படம்: மேற்கண்ட தேதியில் கவேரிப் பண்ணையில் எடுத்தது)
கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல்லின் சிறப்பியல்புகள்
·         பெற்றோர் – கம்பு கோ.8 * எப்.டி.461
·         அதிக புரதச் சத்து (10.71%) மற்றும் இனிப்புத் தண்டுகளைக் கொண்டது.
·         அதிக படியான இலை நீளம் (110 – 115 செ.மீ) மற்றும் அகலமுடைய (4 – 5 செ.மீ) இலைகளைக் கொண்டது.
·         அதிக உயரம் (400 – 500 செ.மீ) வரை வளரும்.
·         அதிக (400 – 450 இலைகள்/குத்து) மற்றும் மிருதுவான தன்மை கொண்ட இலைகளை கொண்டது.
·         அதிக இலை தண்டு விகிதம் (0.71)
·         அதிக தூர்கள் (30 – 40/குத்து) மற்றும் சாயாதத் தன்மை உடையது.
·         வருடத்திற்கு ஏழு முதல் எட்டு முறை மறுதாம்பு பயிர் அறுவடை தரக்கூடியது.
·         வருடத்திற்கு ஏக்கருக்கு 150 முதல் 175 டன் வரை தீவன மகசூல் தரக்கூடியது.
·         பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை உடையது.
·         குறைந்த இடத்தில் குறைந்த காலத்தில் அதிக மகசூல் தரக்கூடியது.
·         கணுக்களைக் சுற்றி உருவாகும் வேர்கள் விரைவாக முளைக்க உதவும்.
·         எல்லா மாவட்டங்களுக்கும் பயிரிட ஏற்றது.
பருவம்
இறவை பயிரை ஆண்டு முழுவதும் பயிரிட உகந்தது.
மண் வகை
அனைத்து மண் வகைகளிலும் பயிரிடலாம்.
நிலம் தயாரித்தல்
இரும்பு கலப்பை கொண்டு இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்தல் வேண்டும். பின்பு பார் அமைக்கும் கருவியைக் கொண்டு 60 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.
உர நிர்வாகம்
ஒரு எக்டருக்கு 25 டன் என்ற அளவில் தொழுஉரத்தினை கடைசி உழவிற்கு முன்பு இட்டு நன்கு உழுதல் வேண்டும். ஏக்கருக்கு 60 கிலோ தழைச்சத்து (130 கிலோ யூரியா), 20 கிலோ மணிச்சத்து (125 கிலோ சூப்பர்பாஸ்பேட்) மற்றும் 16 கிலோ சாம்பல்சத்து (27 கிலோ பொட்டாசு) இட வெண்டும். முழு அளவு மணி மற்றும் சாம்பல் சத்தினையும், 50 சதம் தழைச்சத்தினையும் அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள 50 சதம் தழைச் சத்தை நட்ட 30வது நாளில் மேலுரமாக இட வேண்டும். மேலும் ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும், 30 கிலோ தழைச்சத்தை (65 கிலோ யூரியோ) இடுவதால் அதிக தீவன மகசூல் கிடைக்கும். பரிந்துரைக்கப்பட்ட தழை மற்றும் மணிச்சத்தின் அளவின் 75 சதத்துடன் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போக்டீரியம் (ஏக்கருக்கு தலா 800 கிராம்) அல்லது அசோபாஸ் (1600 கிராம்) கலந்து கலவையாக இடும் போது விளைச்சல் அதிகரிப்பதுடன் 25 சதவீதம் உர அளவினைக் குறைக்கலாம்.
பயிர் இடைவெளி
60 செ.மீ * 50 செ.மீ.
விதையளவு
ஏக்கருக்கு 16,000 இருபரு வேர்க்கரணைகள் அல்லது தண்டு கரணைகள் தேவைப்படும். மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட வயதுடைய தண்டுகள் மட்டுமே விதைக் கரணைகளாக பயன்படுத்த வேண்டும்.
நடவு செய்தல்
வயலினை தயார்செய்து நீர் பாய்ச்சிய பின் வேர்க்கரணைகள் அல்லது தண்டுக் கரணைகளை பார்களில் 50 செ.மீ இடைவெளியில் 1 குத்துக்கு ஒரு வேர்கரணை என்ற அளவில் நடவு செய்ய வேண்டும். விதைக் கரணைகளை வயலில் நடும்போது அவை மண்ணுடன் இறுக்கமாக இருக்கும்படி அதனைச் சுற்றியும் காலால் நன்கு மிதித்துவிட வேண்டும். அப்படி செய்யாவிடில் கரணைகள் வேர்பிடிக்காமல் காய்ந்து விடும். கலப்பு பயிராக 3 வரிசைகள் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்லும் ஒரு வரிசை சேலிமசாலும் கலந்து பயிர் செய்வதால் ஊட்டச்சத்தினை அதிகப்படுத்தலாம்.
களை நிர்வாகம்
நடவு நட்ட 30 நாட்களுக்குள் களைகள் இருப்பின் ஆட்களை வைத்து கைக்களை எடுக்க வேண்டும். அதற்கு பிறகு கம்பு நேப்பியர் புல் அடர்த்தியாக வளருவதால் களைகள் முளைப்பதில்லை.
நீர் நிர்வாகம்
விதைக் கரணைகளை நட்டவுடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு மூன்றாவது நாளில் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு மண் மற்றும் கிடைக்கும் மழை அளவினைப் பொறுத்து 8 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். கழிவு நீரையும் நீர்ப்பாசனத்திற்கு பயன்படுத்தலாம்.
மண் அணைத்தல்
முதல் முறையாக நட்ட 30 நாட்களுக்கு பிறகு மண் அணைக்க வேண்டும். பிறகு மூன்று அறுவடைக்கு ஒரு முறை மண் அணைக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
பொதுவாக பூச்சி மற்றும் நோய்கள் கம்புநேப்பியர் ஒட்டுப்புல்லினை தாக்குவதில்லை. எனவே பயிர் பாதுகாப்பு தேவைப்படாது.
அறுவடை
நடவுக்கு பின்னர் 75 முதல் 80 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். பிறகு ஒவ்வொரு 45 நாட்கள் இடைவெளியிலும் அடுத்தடுத்த அறுவடைகள் செய்யலாம். தீவனத்தை அறுவடை செய்யும்போது முடிந்த வரை நிலத்துடன் சேர்த்து அறுவடை செய்வது நல்லது. இரண்டு அல்லது மூன்று அறுவடைக்கு ஒரு முறை காய்ந்த இலை மற்றும் தண்டுப் பகுதியை அகற்றி விட்டு பரிந்துரைக்கப்பட்ட அளவு உரம் இட்டு, நீர் பாய்ச்சுவதன் மூலம் அதிக தூர்கள் வெடிக்கும்.
இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தூர்களின் சுற்றளவை குறைத்து அதிகப்படியான தூர்களை அகற்றுவது நீர்பாய்ச்சுவதற்கு வசதியாக இருக்கும். இதன் மூலம் கிடைக்கும் வேர்க்கரணைகளை புதிதாக நடவு செய்ய பயன்படுத்தலாம். விதைக்கரணைகளை பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட தண்டினை (தண்டின் கணுவில் உள்ள முளைகள் நன்கு முற்றியவுடன்) பயன்படுத்தலாம்.
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்லில் ஆக்சலேட் என்ற நச்சுப் பொருள் அதிகமாக இருக்கும். எனவே இத்தீவனத்துடன் 5 கிலோ பயறு வகை தீவனத்தை கலந்து கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும். அல்லது சுண்ணாம்பு தண்ணீர் அல்லது தாது உப்பு கலவையை கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும்.
ஆதாரம்: கரும்பு ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி

கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்
பருவம் மற்றும் இரகங்கள்
மாவட்டம்/பருவம்
மாதம்
இரகங்கள்
இறவை
எல்லா மாவட்டங்களும்
வருடம் முழுவதும்
கே.கே.எம் 1, கோ 3 மற்றும் கோ (க.நே) 4
சிறப்பியல்புகள்
விவரங்கள்
கே.கே.எம் 1
கோ 3
கோ (க.நே)4
பெற்றோர்
கம்பு IP 15507 x எப்.டி 429 சிற்றினங்களுக்கிடையே தோன்றியது.
கம்பு பிடி 1697 xபென்னிசெட்டம் பர்பூரியம்சிற்றினங்களுக்கிடையே தோன்றியது
கம்பு கோ 8 x எப்.டி 461 சிற்றினங்களுக்கிடையே தோன்றியது
வயது (நாட்கள்)
பல்லாண்டு தாவரம்
பல்லாண்டு தாவரம்
பல்லாண்டு தாவரம்
பசுந்தீவன் மகசூல் (டன்/எக்டர்/வருடம்)
288
350 (7 அறுவடைகளில்)
375-400 (7 அறுவடைகளில்)
உருவ இயல்புகள்
செடியின் உயரம் (செ.மீ)
155-160
300 – 360
400-500
இலைகளின் எண்ணிக்கை
165-170
400-450
400-450
தூர்களின் எண்ணிக்கை
10-15
30 – 40
30 – 40
இலை தண்டு விகிதம்
-
0.70
0.71
இலை நீளம் (செ.மீ)
110-115
80 – 95
110-115
இலை அகலம் (செ.மீ)
4.5-5.0
3.0 – 4.2
4.0-5.0
தர இயல்புகள்
உலர் பொருட்கள் மகசூல் (டன்/எக்டர்/வருடம்)
47.23
65.12
79.87
புரதச்சத்து (டன்/எக்டர்)
4.65
5.40
8.71
உலர் பொருட்கள் (%)
16.4
17.0
21.3
புரதச்சத்து (%)
9.85
10.5
10.71
ஆக்ஸலேட் (%)
1.50
2.51
2.48

நன்றி! ஆதாரம் : கரும்பு ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி