கால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை(கோ எப் எஸ் 29)

இந்தியாவில் கால்நடைகளின் எண்ணிக்கை அயல்நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு தீவனப் பற்றாக்குறையும் மிக முக்கியமான காரணமாகும்.

தற்போது கால்நடைகளுக்கு 70 முதல் 75 சதவிகிதம் வரை பசுந்தீவனப் பற்றாக்குறை உள்ளது. கால்நடைகளின் உடல் வளர்ச்சி, பால், இறைச்சி உற்பத்தி, இனப் பெருக்கத் திறன், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றுக்கு பசுந்தீவனம் அளிப்பது மிகவும் இன்றியமையாததாகும்.
                
                      (புகைப்படம்- கோவைப்பல்கலைக்கழகம்)


கால்நடைகள் பசுந்தீவனங்களை விரும்பி உண்பதால் அவை உட்கொள்ளும் அளவு அதிகரித்து நல்ல உடல் வளர்ச்சி பெறுகிறது. பசுந்தீவனங்களில் அதிக அளவிலுள்ள புரதம், தாது உப்புகள் மற்றும் உயிர்ச்சத்துக்கள் கால்நடைகளின் உடல் வளர்ச்சிக்கும், பால், இறைச்சி உற்பத்திக்கும், இனப் பெருக்கத் திறனுக்கும் பெரிதும் உதவுகின்றன. அத்துடன் செரிமானத் திறனை அதிகப்படுத்துவதுடன் மட்டுமில்லாமல் கால்நடைகளின் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகின்றன.

பசுந்தீவனங்களைக் கொடுப்பதால் அதிக அளவு அடர் மற்றும் உலர் தீவனங்களைக் கொடுப்பதைத் தவிர்க்கலாம். இதனால் தீவனச் செலவை மிகவும் குறைக்க முடியும்.
பசுந்தீவனங்கள் அனைத்து பருவ காலங்களுக்கு ஏற்றதாகவும், வறட்சியைத் தாங்கக் கூடியதாகவும், விஷத் தன்மை அற்றதாகவும், தரமானதாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். அத்துடன், பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறன் உடையதாகவும், விதை மற்றும் விதைப் பொருள்கள் மலிவானதாகவும், நல்ல வாசனையுடனும் இருப்பது அவசியம்.
தானியத் தீவனப் பயிர்கள்
தானியத் தீவனப் பயிர்கள் கால்நடை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை தனியாக தீவனத்துக்காக மட்டும் பயிரிடப்படுவதில்லை. தானிய உற்பத்திக்காக பயிரிடப்பட்டு அவற்றை அறுவடை செய்த பின்பு பெறப்படும் பயிர் தண்டுகள் மற்றும் வைக்கோல் ஆகியன தீவனமாக உபயோகப்படுத்தப்படுகிறது. பயிர் தண்டுகள் மற்றும் வைக்கோல் ஆகியவை முக்கியமாக உலர் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. பசுந்தீவனங்களுடன் ஒப்பிடுகையில் இவற்றில் சத்துக்கள் குறைவாகவே காணப்படுகிறது. ஆகவே தானிய வகைப் பயிர்களில் பிரத்யேகமானது தீவன மக்காச்சோளம் சூப்பிரிக்கஸ் மக்காச்சோளம். இவற்றை பயிர்களில் தானியங்களாக தனியாக அறுவடை செய்யாமல் பயிர் முழுவதும் 50 சதவீதம்  பூக்கும் தருவாயில் கால்நடைகளுக்கு உணவாக கொடுக்க வேண்டும்.

தீவனச் சோளம் ( கோ.எப்.எஸ்-29): தீவனச் சோளம் (கோ.எப்.எஸ்-29) என்ற ரகம் உயரமாக வளரும் மற்றும் அதிக தீவன மகசூல் கொடுக்க வல்லது. இறவைப் பயிராகவோ அல்லது மானாவாரியாகவோ இவற்றை பயிரிடலாம் விதைத்து 60 நாள்களில் அறுவடைக்கு தயாராகிறது. ஒரு ஹெக்டருக்கு 25 முதல் 30 கிலோ வரை விதை தேவை. ஹெக்டருக்கு 10 டன் தொழு உரம், 60 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல் சத்து என்ற அளவில் இட வேண்டும். விதைகளை வரிசைக்கு வரிசை 30-40 செ.மீ. இடைவெளியும், செடிக்குச் செடி 10 செ.மீ. இடைவெளிவிட்டு பார்களில் விதைக்கலாம்.

விதைத்தவுடன் முதல் நீர் பாசனமும், பின்னர் 3ஆம் நாள் மறுபாசனமும் பின்பு 10 நாள்களுக்கு ஒரு முறையும் பாசனம் செய்ய வேண்டும். விதைத்த 60 நாள்களிலிருந்து தொடர்ந்து பூக்கும் வரை அறுவடை செய்யலாம். ஆண்டுக்கு 5 முறை அறுவடை செய்யலாம். இதில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளன. சைலேஜ் முறையில் பதப்படுத்துவதற்கு பசுந்தீவன சோளப்பயிரை, சிறுசிறு துண்டுகளாக வெட்டி பக்குவப்படுத்தப்பட்ட முறையில் சேமித்து வைக்கலாம். மேற்கூறிய தீவனச் சோளம் (கோ.எப்.எஸ்-29) பசுந்தீவனப் பயிர்களின் விதைகள் தேனி உழவர் பயிற்சி மையத்தில் கிடைக்கிறது.

கால்நடை வளர்ப்போர் இப்பசுந்தீவனப் பயிர்களை உற்பத்தி செய்து அவர்களுடைய கால்நடைகளுக்கு கொடுப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் விற்பனை செய்து நல்ல பலன் பெறலாம்
ஆதாரம் : உழவர் பயிற்சி மையம், தேனி மாவட்டம். தமிழ்நாடு

 தீவனப் பயிர்கள்
தீவன சோளம் (இறவை)
பயிர் மேம்பாடு

மாவட்டங்கள்
இரகங்கள்
அ. இறவை                                        
ஜனவரி – பிப்ரவரி மற்றும் ஏப்ரல் – மே அனைத்து மாவட்டங்கள்
கோ எஃப் , எஸ் – 29 & கோ 31 (மறுதாம்பு சோளம்)
ஆ. மானாவாரி                                 
ஜுன் – ஜுலை
அனைத்து மாவட்டங்கள்
செப்டம்பர் – அக்டோபர்
அனைத்து மாவட்டங்கள்

சிறப்பியல்புகள்

விவரங்கள்
கோ (எப்.எஸ்) 29
கோ (எப்.எஸ்) 31
பெற்றோர்
டி.என்.எஸ் 30 x சொர்கம் சுடானேன்ஸில் இருந்து பெறப்பட்டது.
Gamma ray (400 Gy) mutant of CO (FS) 29
வயது (நாட்கள்)
மறுதாம்பு வகை
(3 years)
மறுதாம்பு வகை
(3 years)
சராசரி பசிந்தீவன மகசூல் (டன்/எக்டர்)
160-170 (6-7 மறுதாம்புகள்)
190-(6-7மறுதாம்புகள்)
தோற்ற இயல்புகள்
தண்டின் உயரம் (செ.மீ)
220-250
270 - 290
தூர்களின் எண்ணிக்கை
10-15
12-17
இலைகளின் எண்ணிக்கை
80-105
90-110
இலை நீளம் (செ.மீ)
75-90
85 - 95
இலை அகலம் (செ.மீ)
3.5-4.6
4.5 - 5.0
இலை தண்டு வீதம்
0.2-0.25
0.26
தர இயல்புகள்
புரதச்சத்து (%)
8.41
9.86
உலர் பொருள் (%)
23.60
25.9
நார் சத்து (%)
25.60
19.80
ஐ.வி.டி.எம்.டி (%)
50.30
52
குறிப்பு : தீவனச் சோளத்துடன் கோ – 5 மற்றும் கோ – எஃப் சி 8 இரக தட்டைப்பயறை சேர்த்து ஊடு பயிராக பயிர் செய்தால் சத்தான தீவனத்தைப் பெறலாம்.

சாகுபடிக் குறிப்புகள் : தீவனச்சோளம் கோ 31

பருவம்
:
ஆண்டு முழுவதும் இறவைப் பயிராகப் பயிர் செய்யலாம். ஒரு முறை விதைத்து பல முறை அறுவடை செய்யலாம்.
நிலம்
:
நீர் தேங்காத நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
நிலம் தயாரித்தல்
:
2 முதல் 3 முறை உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தில் 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்கவும். உழுவதற்கு முன் எக்டருக்கு 25 டன் தொழுவுரம் இடவும்.
விதை அளவு

5 கிலோ / எக்டர்
இடைவெளி
:
30 x 15 செ.மீ.(விதைகளை பார்களின் இருபுறமும் விதைக்க வேண்டும்)
60 x 15 செ.மீ.(விதை உற்பத்தி செய்வதற்கு)
உரம்(எக்டருக்கு)
:
அடியுரம் 
45:40:40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து
 
மேலுரம்
 
விதைத்த 30 வது நாட்களில் 45 கிலோ யூரியா இட வேண்டும். ஒவ்வொரு ஆண்டு முடிவுக்குப்பின்  45:40:40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து
 
இடவும்.
களை நிர்வாகம்
:
முதல் களை விதைத்த 25-30 நாட்களில் எடுக்கவும். பிறகு தேவைப்படும் போது ஒவ்வொரு அறுவடைக்குப்பின்பும் ஒரு முறை களை எடுத்து உரமிடவும்.
நீர்ப்பாசனம்
:
விதைத்தவுடன் நீர் பாய்ச்சி, மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் கொடுத்த பிறகு 7-10 நாட்களுக்கொருமுறை மண் வகை மற்றும் மழை அளவைப்பொறுத்து நீர் பாய்ச்ச வேண்டும்.
பயிர்ப்பாதுகாப்பு
:
பொதுவாகத் தேவையில்லை
பசுந்தீவன அறுவடை
:
50 விழுக்காடு பூக்கும் தருணத்தில் அறுவடை செய்யலாம். முதல் அறுவடை விதைத்த 65 -70 நாட்களிலும் அடுத்த அறுவடைகள் 50 நாட்களுக்கொருமுறை
விதை அறுவடை
:
விதைத்த 110-125 நாட்களில் அறுவடை செய்யலாம்.
பசுந்தீவன மகசூல்
:
192 டன்கள் / எக்டர்/ ஆண்டு (6-7 அறுவடைகளில்)
விதை மகசூல்

1000 கிலோ / எக்டர்/ ஆண்டு. ஆண்டுக்கு மூன்று முறை அறுவடை செய்யலாம். விதை உறக்க நிலை 45-60 நாட்கள். அதனால் அறுவடைக்குப் பிறகு 60 நாட்கள் கழித்து விதைக்க வேண்டும்

0 comments:

Post a Comment