Skip to main content

Posts

Showing posts with the label கோ4

கோ 4, கோ 5 புல் கரனை விற்பனைக்கு (ko 4 grass,ko 5 grass)

குறிப்பாக மழைக்காலம் இனி தீவரமாக இருக்கும் என்பதால் பயிர்களின் வளர்ச்சிக்கு மிகச்சாதகமாக இருக்கும், இயற்கையாகவே மழை மற்றும் சத்துக்கள் அதிகாமாக கிடைப்பதால் மிகச்சிறந்த முளைப்புத்திறம் மற்றும் அதிக விளைச்சலும் கிடைக்கும். பராமரிப்பது எளிதாக இருக்கும். அதாவது நீர்ப்பாய்ச்சுவதும், உரமிடுவதும் இனி வரும் மழைக்காலத்தில் அதிகம் தேவைப்படாது. இவ்வேளையை இயற்கையே பார்த்துக்கொள்ளும். ஆகையால் விவசாயிகள் இனிவரும் ஆடிப்பட்டத்தில் தீவனப்பயிர்களை புதிதாக நடவு செய்யலாம். மேற்கண்ட புகைப்படங்கள் காவேரி பண்ணையில் சில நாட்களுக்கு முன் எடுத்தது. தற்போது எங்கள் பண்ணையில் கால்நடை பண்ணையாளர்கள்/ நண்பர்களுக்கு வழங்க தயார் ஆகிக்கொண்டுள்ள கோ-4, கோ-5 தீவனக்கரனைகள் புகைப்படங்கள் கீழே. கோ-4, கோ-5 தீவனக்கரனைகளுக்கு முன்பதிவுகள் செய்ய தொடர்புகொள்ளவும் நண்பர்களே.

கோ- 4,கோ-5 சாகுபடு முறைகள்.( எளிமையான சுருக்கமான வடிவில்)

1.    கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல் கோ (க.நே) 4 2.    கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல்லின் சிறப்பியல்புகள் 3.    நிலம் தயாரித்தல் 4.    உர நிர்வாகம் 5.    நடவு செய்தல் 6.    களை நிர்வாகம் 7.    நீர் நிர்வாகம் 8.    பயிர் பாதுகாப்பு 9.    அறுவடை கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல் கோ (க.நே) 4 கால்நடை வளர்ப்பானது உழவுத் தொழிலின் உப தொழிலாக இருப்பதோடு மனிதர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்குகின்ற இன்றியமையாத வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது. பொதுவாக கால்நடைகளுக்கு வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை, மக்காச்சோளத்தட்டை மற்றும் பிற பயிர்களின் செடிகள் உணவாக கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மேற்கண்ட தீவனங்கள் கால்நடைகளுக்கு போதுமான ஊட்டச்சத்தினை அளிப்பதில்லை. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினால் 2008ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கால்நடை வளர்ப்பதற்கு உகந்த தீவன புல் வகையான கோ 4 (கம்பு நேப்பியர்) ஒட்டுப்புல்லினை தீவனமாக கொடுப்பதன் மூலம் கால்நடைகளுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்தினை அள...

தீவனப்புல் கோ-4 மற்றும் கோ- 5 ஒர் ஒப்பீடு!

அறிவியல் பூர்வமான அட்டவனை ஒப்பீட்டு பட்டியல் கட்டுரையின் கீழே இணைத்துள்ளேன். அதில் கோ-3 முதல் கோ-5 வரை ஒப்பீட்டு பட்டியல் உள்ளது. அதை நாம் பார்க்கும் போதே ஒவ்வொன்றுக்குமான வித்தியாசத்தை   எளிமையாக நாம் புரிந்துகொள்ளலாம். அப்பட்டியல் அறிவியல் பூர்வமானது ஆகும்.            நண்பர்களே நான் உங்களிடம் பகிர உள்ளது. நடைமுறையில் அது நமது பண்ணையில் எப்படி உள்ளது என்பதைத்தான். எங்களது பண்ணையை பல ஆண்டுகளாக தமிழகத்தில் பல ஆயிரம் கால்நடை பண்ணையாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் தெரியும் என்பதாலும் பல ஆயிரம் பேர் ஆலோசனைகளும் பயிற்சியும் எடுத்துக்கொண்ட இடம் என்பதாலும் எங்களை நன்கு அறிவீர்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையை எழுதுகிறேன்.      என்னதான் நமது பல்கலைக்கழகங்கள் சொன்னாலும் அது நமது நடைமுறைக்கு சரியாக உள்ளதா? என்று பார்க்க வேண்டும். அவ்வாறு தமிழகம் முழுக்க உள்ள பண்ணையாளர்கள் அனைவருக்கும் ஏற்ற ஒன்றாக இருக்குமானால் அது வெற்றி அடையும்.      அதுபோல் புதுவரவான கோ-5 தீவன ஒட்டுப்புல் சில ...