Skip to main content

Posts

Showing posts from July, 2016

கால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை(கோ எப் எஸ் 29)

இந்தியாவில் கால்நடைகளின் எண்ணிக்கை அயல்நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு தீவனப் பற்றாக்குறையும் மிக முக்கியமான காரணமாகும். தற்போது கால்நடைகளுக்கு 70 முதல் 75 சதவிகிதம் வரை பசுந்தீவனப் பற்றாக்குறை உள்ளது. கால்நடைகளின் உடல் வளர்ச்சி, பால், இறைச்சி உற்பத்தி, இனப் பெருக்கத் திறன், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றுக்கு பசுந்தீவனம் அளிப்பது மிகவும் இன்றியமையாததாகும்.                                        (புகைப்படம்- கோவைப்பல்கலைக்கழகம்) கால்நடைகள் பசுந்தீவனங்களை விரும்பி உண்பதால் அவை உட்கொள்ளும் அளவு அதிகரித்து நல்ல உடல் வளர்ச்சி பெறுகிறது. பசுந்தீவனங்களில் அதிக அளவிலுள்ள புரதம், தாது உப்புகள் மற்றும் உயிர்ச்சத்துக்கள் கால்நடைகளின் உடல் வளர்ச்சிக்கும், பால், இறைச்சி உற்பத்திக்கும், இனப் பெருக்கத் திறனுக்கும் பெரிதும் உதவுகின்றன. அத்துடன் செரிமானத் திறனை அதிகப்படுத்துவதுடன் மட்டுமில்லாமல் கால்நடைகளின் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகின்றன. பசுந்தீவனங்களைக...

கோ 4, கோ 5 புல் கரனை விற்பனைக்கு (ko 4 grass,ko 5 grass)

குறிப்பாக மழைக்காலம் இனி தீவரமாக இருக்கும் என்பதால் பயிர்களின் வளர்ச்சிக்கு மிகச்சாதகமாக இருக்கும், இயற்கையாகவே மழை மற்றும் சத்துக்கள் அதிகாமாக கிடைப்பதால் மிகச்சிறந்த முளைப்புத்திறம் மற்றும் அதிக விளைச்சலும் கிடைக்கும். பராமரிப்பது எளிதாக இருக்கும். அதாவது நீர்ப்பாய்ச்சுவதும், உரமிடுவதும் இனி வரும் மழைக்காலத்தில் அதிகம் தேவைப்படாது. இவ்வேளையை இயற்கையே பார்த்துக்கொள்ளும். ஆகையால் விவசாயிகள் இனிவரும் ஆடிப்பட்டத்தில் தீவனப்பயிர்களை புதிதாக நடவு செய்யலாம். மேற்கண்ட புகைப்படங்கள் காவேரி பண்ணையில் சில நாட்களுக்கு முன் எடுத்தது. தற்போது எங்கள் பண்ணையில் கால்நடை பண்ணையாளர்கள்/ நண்பர்களுக்கு வழங்க தயார் ஆகிக்கொண்டுள்ள கோ-4, கோ-5 தீவனக்கரனைகள் புகைப்படங்கள் கீழே. கோ-4, கோ-5 தீவனக்கரனைகளுக்கு முன்பதிவுகள் செய்ய தொடர்புகொள்ளவும் நண்பர்களே.

கோ- 4,கோ-5 சாகுபடு முறைகள்.( எளிமையான சுருக்கமான வடிவில்)

1.    கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல் கோ (க.நே) 4 2.    கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல்லின் சிறப்பியல்புகள் 3.    நிலம் தயாரித்தல் 4.    உர நிர்வாகம் 5.    நடவு செய்தல் 6.    களை நிர்வாகம் 7.    நீர் நிர்வாகம் 8.    பயிர் பாதுகாப்பு 9.    அறுவடை கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல் கோ (க.நே) 4 கால்நடை வளர்ப்பானது உழவுத் தொழிலின் உப தொழிலாக இருப்பதோடு மனிதர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்குகின்ற இன்றியமையாத வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது. பொதுவாக கால்நடைகளுக்கு வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை, மக்காச்சோளத்தட்டை மற்றும் பிற பயிர்களின் செடிகள் உணவாக கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மேற்கண்ட தீவனங்கள் கால்நடைகளுக்கு போதுமான ஊட்டச்சத்தினை அளிப்பதில்லை. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினால் 2008ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கால்நடை வளர்ப்பதற்கு உகந்த தீவன புல் வகையான கோ 4 (கம்பு நேப்பியர்) ஒட்டுப்புல்லினை தீவனமாக கொடுப்பதன் மூலம் கால்நடைகளுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்தினை அள...